சனி, 1 பிப்ரவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 30

மதுரை சோமு - 3 

( தொடர்ச்சி)

பிப்ரவரி 9. மதுரை சோமு அவர்களின் பிறந்த தினம்.

சோமுவின் நாதஸ்வரக் கச்சேரி 

அண்ணாமலையான் சந்நிதியில் சோமு ஒரு நாதஸ்வரக் கச்சேரி செய்தார். என்ன விழிக்கிறீர்கள்? அது நிச்சயமாக  சாரீரமே இல்லை. அது என்ன கல்யாணி , ஐயா? சோமுவின் தனி விசேஷம் என்னவென்றால், அவர் சாரீரம் வல்லின மெல்லினப் பிரயோகங்களில் வல்லமை கொண்டது. அதற்கு மேலாக அவர் இசை தியாகராஜர் சொன்னது போல், நாபியிலிருந்து கிளம்பி இருதயக்கமலத்தில் தோய்ந்து, கண்டம் வழியாக நாதப் பிரவாகமாய் வரும். கடனிழவே என்று பாடும் துர்க்குணம் அவருக்கு அறவே கிடையாது. ஆங்கிலத்தில் ஆடியன்ஸ் பார்டிஸிபேஷன் ( Audience Participation )  என்று சொல்வார்கள். அவையோரை அணைத்துக் கொண்டு, அக்கம் பக்கத்திலிருக்கும் பக்க வாத்தியக்காரர்களை ஊக்குவித்து கிட்டத்தட்ட ஒரு கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் சூழ்நிலையை உண்டாக்கி விடுவார். இதோ, சாரீரம் தென்றல் காற்றுப் போல வீசுகிறது; மறு நிமிடம் அசைந்தாடுகிறது.அதன் பின்னர் ஆடிக் காற்று - பின் புயல் - அதன் பின் சூறாவளி. ஸ்வரங்கள் இரண்டு மூன்று கோர்வைகளாய்க் கைகோத்துக் கொண்டு அதிதுரித காலத்தில் ஸர்க்கஸ் வேலைகள் செய்கின்றன. நாம் தான் நாற்காலி நுனியில் உட்கார வேண்டியிருக்கிறது. அவர் அநாயாசமாகச் செய்கிறார். 

அன்று பாடிய கல்யாணி இந்த ரகத்தைச் சேர்ந்தது தான். ஒரு முழு நீள நாதஸ்வரக் கச்சேரி கேட்பது போன்ற பிரமை தட்டியது. அவையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. வயலின் கந்தசாமியை ஊக்குவித்து, ஜாம் ஜாம் பண்ணி விட்டார். இன்றைய கச்சேரி வித்வான்களின் அமுக்கும் மனப் பான்மையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சோமு ஒரு தனிப் பிறவி “               
             --- சுப்புடு, விகடன், 1976 [ “இசை நாட்டிய விமர்சனம் “ நூல் ]


மதுரை சோமு அவர்களுக்கு 1984 -இல் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் ஸொசைடியின் ‘சங்கீத கலா சிகாமணி ‘ விருது கிடைத்தது. அந்தச் சமயம் ‘கல்கி’யில் வெளியான ஒரு கட்டுரை இதோ!

சிகாமணி சோமு
[ நன்றி: கல்கி ]

இன்னொரு கச்சேரி விமர்சனக் கட்டுரையைப் பாருங்கள் !

அவசியங்களும் அனாவசியங்களும் !

‘கல்கி’யில் வந்த இன்னொரு கட்டுரை!

ஓடும் ரயிலில் ஒரு நேயர் விருப்பம் 


( தொடரும் )

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:




1 கருத்து:

R.S.KRISHNAMURTHY சொன்னது…

சிறு வயதில் சோமு அவர்களின் பாட்டைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.அப்போது தொடங்கிய ஆர்வம் ஒரு வெறி அளவுக்கு உயர்ந்தது! 4 மணி அல்லது 5 மணிகள் கச்சேரி என்பது மிகச் சாதாரணம்! வரும் சீட்டுக்கெல்லாம் பாடல்கள் பாடிவிட்டு, “முடித்துக் கொள்ளலாமா?” என்று ஆடியன்ஸின் ஒப்புதலுடன் கச்சேரியை முடிப்பது அவரது வழக்கம்!! அந்தக் கால இயற்கையான கர்நாடக சங்கீதம் கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்திருந்தோமோ!! உங்களின் கட்டுரைகள் எவ்வளவோ எண்ண அலைகளைக் கிளறி விட்டிருக்கின்றன, நன்றி!!