புதன், 28 ஜனவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 47

வி.வி. சடகோபன் -1
சங்கீத மும்மூர்த்திகள் 

ஜனவரி 29, 1915.
சங்கீத வித்துவான் வி.வி.சடகோபன் பிறந்த நாள் .


[ நன்றி: அரசி ] 

ஆம், இந்த வருடம் ( 2015)  பிப்ரவரி மாதத்தில் அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப் பட இருக்கிறது. அவர் பிறந்த ஊரான வீரவநல்லூரில் தொடங்கிச் சென்னையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

திரைப்பட நடிகர், இசைப்பேராசிரியர், எழுத்தாளர்,  கவிஞர், சங்கீத வித்வான் என்று பல முகங்கள் கொண்டவர். கவர்ச்சி மிகுந்த இவரை என் சிறிய வயதில்,  அவர் சென்னையில் தியாகராயநகரில் வசித்தபோது  பலமுறை பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ( அந்தக் காலத்தில் ( 50-களில்) சைதாப்பேட்டையில் வசித்துவந்த லால்குடி ஜயராமன், “ மின்சார ரயிலில் தி.நகருக்குச் சடகோபன், தண்டபாணி தேசிகர் ஆகியவர்களைச் சந்திக்க வருவேன்”  என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.)

 “கவர்ச்சியும் அழகும் மிகுந்த சடகோபனைக் கதாநாயகனாய்ப் போடப் படத் தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.  அதனால் எனக்கு நிச்சயம் அந்த வாய்ப்புக் கிட்டாது என்றே முடிவு செய்தேன்” என்ற தொனியில்  பிற்காலத்தில் தன் வாழ்க்கை வரலாற்றில் எம்.ஜி.ஆர் எழுதியிருக்கிறார். ! சடகோபன்  நடித்த நவயுவன்’ (1937) தான் வெளிநாட்டில் சில காட்சிகள் எடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் என்று கூறப்படுகிறது .


இவரைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு இதோ!
தினமணி கதிரில் 1984-இல் வந்தது.



இவர் எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கங்கள்  தினமணி கதிரில் அந்தக் காலத்தில் வந்தன. அவற்றில் சிலவற்றை என் வலைப்பூவில் இடலாம் என்று நினைக்கிறேன்.

இதோ முதல் கட்டுரை! 1-1-84 - இதழில் வெளிவந்தது..






அடுத்த இதழில் ‘தினமணி கதி’ரில் வந்த ஒரு பிழைதிருத்தம் :


[ நன்றி : தினமணி கதிர் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

கருத்துகள் இல்லை: