திங்கள், 29 மே, 2017

732 சுப்புடு -1

டொராண்டோவில் சுப்புடு 


டொராண்டோ -94
மே 28, 2017. இன்று பிரபல இசை விமர்சகர் ‘சுப்புடு’ அவர்களின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப் படுகிறது.

டொராண்டோவிற்கு அவர் 94-இல் வந்தபோது, அவரைச் சந்தித்ததும், அவரிடம் இல்லாத அவருடைய பல விமரிசனங்களின் நகல்களை அவருக்குக் கொடுத்ததும் பற்றி ஏற்கனவே சங்கீத நினைவுகள் -1  என்ற பதிவில் எழுதியிருக்கிறேன்.

டொராண்டோ திருப்புகழ் அன்பர்களுடன் சுப்புடு
அவர் திருப்புகழ் அன்பர்களின்  இசைவழிபாடு ஒன்றுக்கு வந்து, எலெக்ட்ரானிக் ஆர்கனில் வாசித்து, பின்  அவருடைய பல இசை ‘அனுபவங்களை’யும்  எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.  ஒரே ஜோக் மயம் தான்!

நான் அவரை வரவேற்றுப் பேசினபோது , அவர் ரங்கூனில் 1928-இல் திருவிசை நல்லூர் ராமசாமி சாஸ்திரிகளின்  மிமிக்ரை நிகழ்ச்சியில், ‘குட்டி நாய்’ போல் சாஸ்திரிகள் போலவே சப்தங்கள் எழுப்பி , அவருடைய ‘சபாஷ்’ பெற்றதைப் பற்றிச் சொன்னேன்.  உடனே குறுக்கிட்ட சுப்புடு, “ என்னடா, நான் நாய் மாதிரி குரைக்கிறேன் என்கிறாயா? “ என்று ஒரு போடு போட்டார். மேலும், அவர் ‘கல்கி’யின் ஊக்கத்தால் தொடர்ந்து எழுதியது பற்றி எல்லாம் குறிப்பிட்டதை  ரசித்தார்.

எங்கள் திருப்புகழ் குரு தாரா கிருஷ்ணன், கிருஷ்ணன் மாமா இருவருக்கும் சுப்புடு மிகவும் நெருங்கியவர் ஆதலால் எங்களிடம் தயக்கமின்றிப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். காரசாரமான கமெண்ட்டுகளும்  நடு நடுவே  இருந்தன !

ஜோக் ஸெஷன் !

 உதாரணம்: அவரிடம்  ஒரு பிரபல வித்வானின் வர்ணங்களைப் பற்றிக் கேட்டேன். “போடா, போ! அதெல்லாம் சாயம் போன வர்ணம்டா! நான் ஒரு வலஜி ராக வர்ணம் செய்திருக்கிறேன்! பாலமுரளி பாடிக் கொடுத்திருக்கிறார்! நீ கேட்டுப் பார் ! “ என்றார்.

அவர் முத்துசாமி தீக்ஷிதரைப்  பற்றி எழுதி ‘வாங்கிக் கட்டினதை’ப் பற்றிக் கேட்டுக் கொஞ்சம் ‘உசுப்பி விட்டேன்’. அவர் சொன்னதை எல்லாம்  இன்னொரு நாள் எழுதுகிறேன்! :-)

இப்போது அவர் டொராண்டோவிலிருந்து அனுப்பின இரு கட்டுரைகள் இதோ!




கட்டுரையில் உள்ள படம் கீழே: ( இடது பக்கத்தில்  எங்கள் குரு தாரா கிருஷ்ணன் )

[  நன்றி: மீனா ராமநாதன் ] 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்
சுப்புடு

கருத்துகள் இல்லை: