சனி, 30 செப்டம்பர், 2017

857. பாடலும் படமும் - 26

துர்க்கை 
                                     



தவள ரூபச ரச்சுதி யிந்திரை
     ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
          சமுக சேவித துர்க்கைப யங்கரி ...... புவநேசை

சகல காரணி சத்திப ரம்பரி
     யிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி
          சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி

சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
     கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
          த்ரிபுரை யாமளை     ---- திருப்புகழ் -----

தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை
ரம்பையர் சமுக சேவித துர்க்கை பயங்கரி
 ... வெண்ணிறம்
கொண்ட சரஸ்வதி, லக்ஷ்மி, ரதி, இந்திராணி, கிருத்திகை மாதர் அறுவர்,
அரம்பையர்கள் ஆகியோரால் வணங்கப்படும் துர்க்கா தேவி, பயங்கரி,

புவநேசை சகல காரணி சத்தி பரம்பரி இமய பார்வதி ருத்ரி
நிரஞ்சனி சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி
 ...
புவனேஸ்வரி, எல்லா காரியங்களுக்கும் காரணமாக இருப்பவள், சக்தி,
முழு முதலாகிய தேவி, இமய மலை அரசனின் மகளான பார்வதி, ருத்ரி,
மாசற்றவள், சமயங்களுக்குத் தலைவி, உருவம் இல்லாதவள், கிரியா
சக்தியானவள், எம் தாய்,

சிவை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி
அம்பிகை த்ரிபுரை யாமளை
 ... சிவனின் தேவி, மனத்தை ஞான நிலைக்கு
எழுப்புபவள், அறிவு ரூப ஆனந்த அழகி, கெளரி, வேதத்தில் சிறப்பாக
எடுத்து ஓதப்பட்டவள், அம்பிகை, திரிபுரங்களை எரித்தவள், சியாமள
நிறம் கொண்டவள் (ஆகிய பார்வதி) 


[ திருவாரூர் துர்க்கை : ஓவியம்: சில்பி ]



தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: